தேசிய மாவீரர் நாள் நிகழ்வு இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 11.25 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து மாவீரர்களின் நினைவாக மாணவர் ஒன்றியத்தினால் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

























































