இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் டுவிட்டர் நிறுவனத்தின் மூத்த இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் என்பவரை டுவிட்டர் நிறுவனம் செயலி தயாரிப்பு துறையின் மூத்த இயக்குனாராக நியமித்துள்ளது. இவர் அக்டோபர் 2-ம் திகதி பணியில் சேர்வார் என கூறப்படுகிறது.
கிருஷ்ணன் இதற்கு முன் பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறினார். அதன் பின் ஸ்னாப்சார்ட் என்ற நிறுவனத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், டுவிட்டர் நிறுவனத்தின் தயாரிப்பு குழுவுடன் இணைந்து பணியாற்றப் போவது குறித்து கிருஷ்ணன் டுவிட் செய்திருந்தார். அதற்கு டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஜக், கிருஷ்ணனை வரவேற்று பதில் டுவிட் செய்துள்ளார்.




















































