பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சிறப்பு உரையாற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு கிடைத்துள்ளது.
அந்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் 2017 தேசிய பாதுகாப்பு மற்றும் யுத்தம் தொடர்பிலான மாநாட்டில் இந்த உரையாற்றுமாறு மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதானியான லெப்டினன்ட் ஜெனரல் ரிஸ்வான் அக்தாரினால் மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் அனுபவம் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்களின் கீழ் மஹிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார்.
இந்த மாதம் 20ஆம் திகதி காலை 11.30 மணியில் இருந்து 1.30 வரை இந்த உரையாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.