பொதுவாக நதிகள் என்றாலே அதற்கு பெண்ணின் பெயரை சூட்டி, அதை பெண் தெய்வமாக கருதப்படுவது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே..
ஆனால் ஏன் அவ்வாறு பெண்ணின் பெயரை நதிகளுக்கு வைக்கப்பட்டுள்ளது, அதன் பின்னணி அர்த்தம் என்ன? என்பதை பற்றி நீங்கள் யோசித்தது உண்டா?
நதிகளை பெண் தெய்வமாக கருதுவது ஏன்?
சமுத்திரத்தை ஆண் ஸ்வரூபமாகவும், நதிகளை பெண் ஸ்வரூபமாகவும் சாஸ்திரம் கூறுகிறது. அதனால் தான் சமுத்திரத்தை சமுத்திரராஜன் என்றும் நதிகளை பெண் வடிவம் என்றும் அழைக்கப்படுகிறது.
நுட்பமாக கவனித்தால், அனைத்துமே வருணனின் வடிவங்கள் தான். சமுத்திரராஜன் என்றால் வருணன்.
இந்த பெண் நதிகள் அனைத்தும் தன் கணவனை அடையும் விதமாக சமுத்திரராஜனை அடைய வேண்டும் என்பது இயற்கையின் நியதி.
அதனால் எக்காரணம் கொண்டும் அந்த நதிகளை தடுக்கக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் நாம் அந்த நதி நீரை பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, சமுத்திரராஜனிடம் சென்றடையும் நதியை மட்டும் தடுக்க கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.
எனவே தான் நதிகளுக்கு பெண்ணின் பெயரை சூட்டி, அதை பெண் தெய்வமாக வழிபடுகிறோம்.