அச்சுவேலி – ஆவரங்கால் பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆவரங்கால் நடராஜா இராமலிங்க மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ச.டிஷாந்த் என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.
அப்பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்தே மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




















































