முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவில் நாளை (12) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கல்கிஸை மற்றும் இரத்மலானை பகுதிகளில் காணிகளை கொள்வனவு செய்தமை மற்றும் ஆடம்பர வீடொன்றை நிர்மாணிப்பதற்காக பணம் பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




















































