இந்திய தலைமை தேர்தல் ஆணையாராக பணியாற்றிவந்த நசிம் ஸைதியின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்ததையடுத்து அவரது இடம் காலியானது. அந்த இடத்திற்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுனில் அரோராவை இந்திய சட்ட அமைச்சகம் நிபமித்துள்ளது.
அச்சல் குமார் ஜோதி தலைமை தேர்தல் ஆணையராகவும், ஓம் பிரகாஷ் ராவத் மற்றொரு தேர்தல் ஆணையாரகவும் செயல்பட்டு வந்த நிலையில், காலியான தேர்தல் ஆணையர் இடமும் நிறப்பட்டுள்ளதால் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையம் முழுத்தகுதி பெற்றுள்ளது.
சுனில் அரோராவின் பதவிக்காலம் அவர் பதவியேற்கும் நாள் முதல் தொடங்கும் என சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அரோரா, 1980ல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். தேர்ந்தெடுக்கப்பட்டார். 1993 முதல் 1998ம் ஆண்டுவரை ராஜஸ்தான் மாநில முதல்வரின் செயலாளராக செயல்பட்டு வந்தார். அதன் பின்னர், 1999 முதல் 2002ம் ஆண்டுவரை உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சக துணை செயலாளராக பணியாற்றினார். 2005 முதல் 2008ம் ஆண்டுவரை ராஜஸ்தான் மாநில முதல்வரின் தலைமை செயலாளராக பணியாற்றி வந்த அவர், இறுதியாக தகவல் மற்றும் ஒலிபரப்புதுறை செயலாளர் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றா