அவன் ஒரு பிச்சைக்காரன்!
பொன்னும் பொருளும் தேடி
புகழும் பெருமையும் தேடி
எண்ணற்ற செல்வங்கள் ஏராளம் தேடி
காண் போர் எல்லாம்
கை கூப்பி வணங்க
ஊரறிய உயர்ந்தவன்.
உள்ளத்தால் மட்டும் கள்வனவன்!
ஏழை எளிமைகள் எல்லாம்
இவன் வீட்டில் தொழிலாளி
உலைவைக்க அரிசியில்லை
உண்டியில் பசிகொள்ள
கூலிக்கு உழைத்து குடிசையில் வாழும்
ஏழையின் வியர்வையில்
ஏசீயில் வாழும் ஏமாற்று முதலாளி!
அழுக்கான ஆடைகளை
சுத்தம் செய்யும் தொழிலாளி
வீட்டின் முன் நின்று
உழைப்பின் ஊதியம் கேட்டால்
விரத்தி கொள்ளும்
அழுக்கான வெள்ளைக்காரர்
அழகான ஆடைக்குள்
ஒழிந்திருக்கும் உள்ளத்தில்
எண்ணிட முடியாது.
எண்ணற்ற அழுக்குகள்
ஏலம் விடும் மந்தையைப்போல்
பெற்றெடுத்த தன்மகனை
சீதனம் கேட்டு
சிறைப்பிடித்து பெண்களை
குத்தகை வாழ்வில்
குடித்தனம் நடத்தும்
குள்ளநரி முதலாளி!
புகழுக்கும் பெருமைக்கும்
உறவுகளுக்கும் உதவிடவும்
ஒரு கணம் கூட தளராத தன் சிரத்தை
மாலைகள் அணிந்து மரியாதை ஏற்க
தயங்காமல் சரியும் தன் சிரம்
ஊருக்குள் உயர்ந்த மாளிகை வீடு
வயல் வெளி நிலமும்
பயன்தரும் செடியும்
பழுத்து விழுந்தாலும்
உண்ண கொடுக்காத
உயர்ந்த உள்ளங்கள்!
ஐயா என்று அவலக்குரல்
வாசல் முற்றத்தில் ஒலிக்க
வழிமாறிப் போன வாழ்வினில்
இருள் சூழ்ந்த உறவுகள்
தாருமையா தருமம்
தன்கையை நீட்ட
கொடுக்கும் அளவிற்கு நான் ஒன்றும்
கர்ணன் கிடையாது
கூச்சலிடும் முதலாளி
அவன் ஒரு கொடுக்க
மறந்த பிச்சைக்காரன்!
- உயிர்புடன் – தரணி