கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்ட உறவுகள் கறுப்புப் பட்டியணிந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று 54ஆவது நாளாக காணாமலாக்கப்பட்ட உறவுகளினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்றைய புதுவருட தினத்தை ஒரு துக்கதினமாக அறிவித்துள்ள போராட்டக்காரர்கள், கறுப்பு ஆடையுடன் கறுப்பு பட்டியணிந்து, தொலைந்த தமது உறவுகளின் புகைப்படங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காணாமலாக்கப்பட்ட உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் இப்போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.





















































