இன்னிசையை ரசித்து
முகத்தில் அகம் மலர
இனிதே வரவேற்கும்
எனது ஊர்!
அதிகம் கட்டிட மரங்கள்
முளைக்காமல்
இயற்கையின் அருளால்
தென்னைமரத் தடுக்காலும்
பனையோலை கீற்றுகளாலும்
வேயப்பட்ட கிராம மாளிகைகள்!
இன்னும்
பாவாடைத் தாவணியில்
வலம் வரும்
கிராமத்துக்குயில்களாக
இளம்பெண்கள்!
கதர்வேட்டி கட்டி
மிடுக்கான தோரணையில்
எடுப்பான தோற்றத்தில்
இளம் காளையர்கள்!
அண்ணனோடு பாசத்திலும்
தம்பியோடு அரவணைப்பிலும்
அக்காவின் அன்பிலும்
தங்கையின் பாசத்திலும்
இன்னும் மிளிர்கிறது
கிராமத்து வாசனையாக
பாசங்கள்!
பெரியவீட்டு
கதவிடுக்கில்
வெட்கத்தோடு
ஒளிந்துபார்க்கும்
பெண் மனங்கள்!
பெரியவர்
வந்துவிட்டாரென
கலைந்துபோகும்
காளையர் கூட்டம்!
விருந்தாளிகள் முகம் மலர
எதார்த்த உபசரிப்பில்
உறைந்து போகும்
விருந்தோம்பல்கள்!
தென்னைமர சோலை நடுவே
சோகம் தொலைக்கும்
இனிய ஊர் தான்
எனது ஊர் பொள்ளாச்சி!
கோவை சசிக்குமார்.