இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்த இருவரில் ஒருவர் இராணுவ மேஜர் என தெரிவிக்கப்படுகின்றது. அவர் விடுமுறை பெற்று வந்த ஒருவராகும்.
யக்வில, போவத்தை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான மஹேஷ் ரத்நாயக்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மற்றவர் நாத்தன்டிய பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய மஞ்சுல சம்பத் என்பவராகும்.
பன்னல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.