இன்று நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின்போது இடம்பெற்ற தேர்தல் விதி மீறில்கள் தொடா்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கு 600 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
ப்ஃவ்ரல் (PAFFREL) தோ்தல் கண்காணிப்பு அமைப்புக்கு 143 தேர்தல் மீறல் தொடர்பான முறைப்பாடுகள் இன்று மட்டும் கிடைத்துள்ளன. தேர்தலுக்கு முந்தைய காலத்தில் 2300 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பவ்ரல் தெரிவித்துள்ளது.
வாக்குச் சாவடிகளுக்கு வெளியே சட்டவிரோதமாக பிரச்சாரம் செய்வது தொடர்பாக ஏராளமான புகார்கள் கிடைத்துள்ளது. இதனைவிட மஹியங்கனையில் ஒரு தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் ப்ஃவ்ரலின் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல்களுக்காக சமூக ஊடகங்களை, குறிப்பாக பேஸ்புக்கை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக கிட்டத்தட்ட 4,316 புகார்கள் இன்று மட்டும் கிடைத்துள்ளன.
பேஸ்புக்கில் சட்டவிரோதமாக பிரசாரங்களை முன்னெடுத்த 60 போ் கண்டறியப்பட்டு அவா்களது பேஸ்புக் பக்கங்களை தடை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரோஹன ஹெட்டியராச்சி கூறியுள்ளார்.
பேஸ்புக்கை தவறாகப் பயன்படுத்தி தோ்தல் விதிகளை மீறியதாக தேர்தலுக்கு முன்னர் மொத்தம் 2000 புகார்கள் கிடைத்துள்ளதாகவும் அவா் கூறினார்.
இதற்கிடையில், தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பாக தமக்கு மொத்தம் 301 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் (சி.எம்.இ.வி) தெரிவித்துள்ளது.
பொதுஜன பெரமுன தொடா்பாக 151 முறைப்பாடுகளும் ஐக்கிய மக்கள் சக்தி தொடா்பில் 34 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக சி.எம்.இ.வி. தெரிவித்துள்ளது.
வாக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டமை தொடா்பாகவும் வாக்குச் சாவடிக்குச் செல்ல 2 மணித்தியாலங்களுக்கு மேல் வாக்களர்கள் காத்திருக்க வைக்கப்பட்டமை தொடர்பில் ஊா்காவற்றுறையி்ல் இருந்து ஒரு முறைப்பாடும் சி.எம்.இ.விக்குக் கிடைத்துள்ளன.
இதனைவிட 151 சட்டவிரோத பிரச்சார சம்பவங்கள், மிரட்டல் அல்லது செல்வாக்கு செலுத்தியமை தொடா்பில் 57 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
சட்டவிரோத சுவரொட்டிகள் தொடர்பான 21 முறைப்பாடுகளும் தேர்தல் குற்றங்கள் தொடா்பில் 17 முறைப்பாடுகளும் சுகாதார வழிகாட்டுதல்களை மீறியமை குறித்த 15 முறைப்பாடுகளும் வாக்காளர்கள் தொடர்பான 11 முறைப்பாடுகள், கடமையில் உள்ள தேர்தல் அதிகாரிகள் தொடர்பான 10 முறைப்பாடுகள், இலவச பொருட்கள் விநியோகம் குறித்த 07 முறைப்பாடுகள் தாக்குதல்கள் குறித்த 03 முறைப்பாடுகள், இலஞ்சம் தொடர்பான 01 முறைப்பாடு மற்றும் பிற 08 முறைப்பாடுகள் இன்று தமக்குக் கிடைத்துள்ளதாக சி.எம்.இ.வி. தெரிவித்துள்ளது.
தோ்தல் விதி மீறல்கள் தொடா்பில் தமக்கு 170 கிடைத்துள்ளதாக கபே (CAFFE) நிர்வாகப் பணிப்பாளா் மனஸ் மேக்கன் கூறியுள்ளார்.
நிகவரேத்திய பகுதியில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தோ்தல் விதி மீறல் தொடா்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மூன்று தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
100-க்கு மேற்பட்ட ஆதரவாளா்கள் மற்றும் பெருமளவான வாகனங்களுடன் வாக்களா்கள் மத்தியில் பிரதமர் சென்றமை மற்றும் ஆதரவாளர்களுடன் சில வாக்குச் சாவடி எல்லைகளுக்குள் நுழைந்தமை தொடா்பாக முறைப்பாடு கிடைத்துள்ளது.
பிரதமரின் இவ்வாறான செயற்பாடு அப்பட்டமான தோ்தல் விதி மீறல் எனவும் கண்காணிப்பு அமைப்புக்கள் கூறியுள்ளன.
இவ்வாறான செயற்பாடு நீதியானவும் சுதந்திரமானதுமான தோ்தலை குறைமதிப்பிற்குட்பத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தேசிய தேர்தல் ஆணையகத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. முறைகேடுகள் கண்டறியப்பட்ட வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, முந்தைய நாடாளுமன்றத் தோ்தல்களுடன் ஒப்பிடுகையில் இன்றைய தோ்தல் அமைதியாக நடைபெற்றதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளான கபே (CAFFE), ப்ஃவ்ரல் (PAFFREL) மற்றும் சி.எம்.இ.வி. ஆகியன கூட்டாகத் தெரிவித்துள்ளன.