கொழும்பு நகரப் பகுதியில், 11 மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் சுமித் ரணசிங்க ஆகிய இருவரும் பொறுப்புக் கூற வேண்டுமென, ஓய்வுப்பெற்ற ரியர் அட்மிரல் சியாமல் பெர்ணான்டோ வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஜீவனி பத்தேகலவிடம் இதனைத் தெரிவித்துள்ளனர். வசந்த கரன்னாகொடவின் கீழ் சேவையாற்றிய அவரது செயலாளரே இந்த சம்பவத்தின் சாட்சியாளர் என்றும் ரியர் அட்மிரல் சியாமல் பெர்ணான்டோ தெரிவித்ததாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தன பிரசாத் எனப்படும் நேவி சம்பத்தை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் ஜீவனி பத்தேகல உத்தரவிட்டுள்ளார்.