பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும், அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான பேரூந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் பொது செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியன கலந்து கொண்டு அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்திருந்தன.
இதேவேளை நாளைய தினம் வவுனியாவிலும் இவ்வாறன போராட்டம் ஒன்று ஒழுங்கு
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.